தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுருளி அருவி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பு

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Advertisement

கம்பம் : கம்பம் அருகே சுருளி அருவி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாகவும், புனித ஸ்தலமாகவும் சுருளி அருவி விளங்குகிறது. இந்த அருவிக்கு, தினமும் வெளி மாவட்டங்களில் இருந்தும், சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

மேலும் இங்கு தமிழ் புத்தாண்டு, வைகாசி விசாகம், ஆடி அமாவாசை, தைப்பூசம், தை அமாவாசை, மஹாளய அமாவாசை, பங்குனி உத்திரம் உள்ளிட்ட முக்கிய விஷேச தினங்களில் இங்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் புனித அருவியில் நீராடி விட்டு இங்குள்ள சுருளி வேலப்பர் கோயில், பூத நாராயணன் கோயில், கைலாயநாதர் குகை, ஆதி அண்ணாமலையார் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சாமி தரிசனம் செய்து வழிபடுவது வழக்கம். இத்தகைய விஷேச தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்நிலையில் இங்குள்ள ஆதி அண்ணாமலையார் கோயிலில் இருந்து பூத நாராயணன் கோயில் வரை உள்ள சாலையின் இரு புறமும், பெரும்பாலானோர் கடைகளை வைத்து நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, அருவி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பக்தர்கள் கூறுகையில், ”ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் சுருளி அருவிக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் சாலையின் இரு புறமும் கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் பெரிதும் இடையூறு ஏற்படுகிறது.

மேலும் இந்த ஆக்கிரமிப்பு கடைகள் முன்பாக பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றால் கடைகாரர்கள் அதற்கு அடாவடியாக கட்டணம் வசூல் செய்வதாகவும் கூறப்படுகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement

Related News