தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுரேஷ் கோபி படப்பிடிப்பில் செயற்கை குண்டுவெடிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி: நில நடுக்கம் ஏற்பட்டதாக வீட்டை விட்டு ஓட்டம்

திருவனந்தபுரம்: ஒன்றிய சுற்றுலா மற்றும் பெட்ரோலியம், எரிவாயுத்துறை இணை அமைச்சராக இருக்கும் நடிகர் சுரேஷ் கோபி சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் கோபி தற்போது கொம்பன் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக இடுக்கி மாவட்டம் வாகமண் மலைப்பகுதியில் நடைபெற்று வந்தது.

Advertisement

இதற்காக அப்பகுதியில் தொழிற்சாலைகள் போல செட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது போல பயங்கர சத்தம் கேட்டது. அப்போது வீடுகளில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அப்பகுதியினர் நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டதோ என கருதி வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.

ஆனால் அது சுரேஷ் கோபியின் படப்பிடிப்புக்காக நடத்தப்பட்ட செயற்கை குண்டுவெடிப்பு என பின்னர்தான் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தங்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் எப்படி செயற்கை குண்டு வெடிப்பை நடத்தலாம் என்று கூறி பொதுமக்கள் படப்பிடிப்பு குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து படப்பிடிப்புக் குழு படப்பிடிப்பை ரத்து செய்தது.

Advertisement