தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2.40 லட்சம் அபராதம்: மீனம்பாக்கம் ஆர்டிஓ அதிரடி

 

Advertisement

ஆலந்தூர்: தீபாவளி பண்டிகைக்காக தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளிடம் தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதுகுறித்து அரசு மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, ஆம்னி பேருந்துகளில் கட்டணம் குறைக்கப்படும் எனத் தகவல் வெளியானது. எனினும், ஒருசில ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக நேற்று மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலத்துக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான தனிப்படையினர், நேற்று முழுவதும் தென்சென்னை பகுதியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் 108 ஆம்னி பேருந்துகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது, கூடுதல் பாரம் ஏற்றப்பட்டது, புகை பரிசோதனை சான்றிதழ் இல்லாதது உள்பட பல்வேறு விதிமுறைகளை மீறிய 52 ஆம்னி பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை அளித்து, அவற்றுக்கு ரூ.2.40 லட்சம் அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் நடவடிக்கை மேற்கொண்டார்.

Advertisement

Related News