தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூரத் ரயில் நிலையத்தில் 2 கி.மீ. தூரம் காத்திருந்த பயணிகள்: சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு

சூரத்: தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகளின்போது, பல்வேறு மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக நகரங்களுக்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவது வழக்கம். இந்த சமயங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் போதுமானதாக இல்லாததாலும், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் குவிவதாலும், ரயில் நிலையங்கள் திணறுவதும், பயணிகள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாவதும் வாடிக்கையாக உள்ளது.

Advertisement

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள உத்னா ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக். 19) மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி, சத் பூஜை பண்டிகைகளைக் கொண்டாடவும், பீகாரில் நடைபெறவிருக்கும் தேர்தலையொட்டியும், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதன் காரணமாக, ரயில் நிலையத்திற்கு வெளியே பயணிகளின் வரிசை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டிருந்தது.

பல மணி நேரம் காத்திருந்தும் ரயில்களில் ஏற முடியாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சமூக வலைதளங்களில் பரவிய காணொலிகளில், கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி மக்கள் தவிப்பதும், ரயில்களுக்குள் இடம் பிடிக்கப் போராடுவதும் போன்ற காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தின. எதிர்பார்ப்பை மீறிய கூட்டத்தால் ரயில்வே நிர்வாகத்தின் அனைத்து ஏற்பாடுகளும் தோல்வியடைந்தன. இதனால் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது.

Advertisement

Related News