தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி: உச்ச நீதிமன்ற குழு அதிகாரி கரூர் வருகை

கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27ம் தேதி நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள், அரசு அதிகாரிகள், தவெக நிர்வாகிகள் என பலகட்ட விசாரணையை முடித்தனர். இதைதொடர்ந்து அடுத்தகட்டமாக நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கின் சிபிஐ விசாரணை செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் கொண்ட மூவர் கண்காணிப்பு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருந்தது. சிபிஐ விசாரணையை தொடங்கி ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டதால் கரூர் சிபிஐ அலுவலகத்துக்கு ஓய்வு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ய முடிவு செய்திருந்தனர்.

Advertisement

இந்நிலையில் கரூர் பயணியர் மாளிகையில் உள்ள சிபிஐ தற்காலிக அலுவலகத்துக்கு கண்காணிப்பு குழுவை சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி சுமித் சரண் இன்று காலை 10.10 மணிக்கு காரில் வந்தார். இதையடுத்து சிபிஐ அலுவலகத்துக்குள் சென்று அதிகாரிகளிடம் இதுவரை நடந்த விசாரணை குறித்து சுமித் சரண் கேட்டறிந்தார். மேலும் வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மற்றும் சுமித் சரண் ஆலோசனை நடத்தினர்.

Advertisement