தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உச்சநீதிமன்ற 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்: ஜனாதிபதி உத்தரவு

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் 24ம் தேதி தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயின் பதவிக்காலம் நவம்பர் 23ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, வழக்கமான நடைமுறையின்படி, தனக்கு அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மிகவும் மூத்த நீதிபதியாக இருக்கும் நீதிபதி சூர்ய காந்தின் பெயரை ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்ய காந்தை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வரும் நவம்பர் 24ம் தேதி நீதிபதி சூர்யகாந்த் பதவி ஏற்கிறார். அவர் வரும் 2027ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி வரை பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள தன்னுடைய அதிகாரங்களின் அடிப்படையில் நீதிபதி சூர்யகாந்தை தலைமை நீதிபதியாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.புதிய தலைமை நீதிபதிக்கு என்னுடைய இதயப்பூர்வ வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

* அரியானாவின் முதல் தலைமை நீதிபதி

அரியானா மாநிலம், ஹிசார் நகரில் 1962ம் ஆண்டு பிறந்த நீதிபதி சூர்யகாந்த், 2004 ஜனவரியில் பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2018ம் ஆண்டு அக்டோபரில் இமாச்சல் பிரதேசத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2019ம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யகாந்த் உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி சூர்யகாந்த், ​​நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறைப் பதவியை வகிக்க உள்ள அரியானாவை சேர்ந்த முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement