தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆன்லைன் தளங்களில் காமெடி என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தால் கடும் தண்டனை: சட்டம் இயற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை

புதுடெல்லி: காமெடி என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்தால் கடும் தண்டனை விதிக்க சட்டம் இயற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. பிரபலமான சில ஸ்டான்ட் அப் காமெடியன்கள், ஆன்லைன் தளங்களில் நடத்தும் நிகழ்ச்சிகளில் மாற்றுத்திறனாளிகளை மோசமாக கேலி செய்வதாக தொடரப்பட்ட வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் கொண்ட அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சாதி ரீதியாக மோசமான கருத்தை தெரிவிப்பதை குற்றமாக்க எஸ்சி, எஸ்சி வன்கொடுமை தடுப்பு சட்டம் இருப்பது போல, மாற்றுத்திறனாளிகள், அரிய மரபணு கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களை கேலி செய்வோருக்கு எதிராக கடும் தண்டனை வழங்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

ஆன்லைன் தளங்களில் ஆபாசமான, புண்படுத்தும் அல்லது சட்டவிரோத கருத்துகள் தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்த நடுநிலையான, சுதந்திரமான தன்னாட்சி அமைப்பு தேவை என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பிரபல ஸ்டான்ட் அப் காமெடி நிகழ்ச்சி நடத்துவர்கள் எதிர்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக நிதி திரட்ட நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பாராட்டுகளை தெரிவித்தார். பின்னர், நீதிபதிகள் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Advertisement