தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போர் போன்ற அவசர நிலைக் காலங்களில் வேண்டுமானால் மாநில விவகாரங்களில் ஒன்றிய அரசு தலையிடலாம் : உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி : சட்ட மசோதாக்களுக்கான கால நிர்ணயம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதத்திற்கு பதில் என்ன ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சட்ட மசோதாக்களுக்கான கால நிர்ணயம் மீது குடியரசு தலைவர் கேள்வி எழுப்பிய வழக்கில், இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. இன்றுடன் ஒன்றிய அரசு தரப்பு வாதங்களை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய வழக்கு விசாரணையில், ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.

Advertisement

2ஆவதாக ஒரு மசோதா நிறைவேற்றி அனுப்பினால் அதனை ஆளுநர் திருப்பி அனுப்ப முடியுமா?. ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் உள்ளதா?. மாநில அரசு நிறைவேற்றிய மசோதாவை ஒன்றிய அரசு திருப்பி அனுப்ப இயலுமா? அதன் விளைவுகள் என்ன? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சட்டமன்றத்தில் 2வது முறையாக நிறைவேற்றி அனுப்பும் மசோதாவை ஆளுநர் குடியரசுத்தலைவருக்கு அனுப்ப இயலாது, ஒப்புதல் அளிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற தமிழ்நாடு அரசின் வாதத்திற்கு என்ன பதில் என்றும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

"போர் போன்ற அவசர நிலைக் காலங்களில் வேண்டுமானால் தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு என்ற அடிப்படையில், மாநில விவகாரங்களில் ஒன்றிய அரசு தலையிடலாம். ஆனால், சாதாரண நேரங்களில் மத்திய சட்டங்களுடன் முரணாக இல்லாத மாநில அரசின் மசோதாவில் எப்படி தலையிட முடியும்?" என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. குடியரசு தலைவர் ஒன்றிய அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்படுவது போல் மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் தானே? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், ஆளுநர் மசோதாவை ஏன் நிறுத்தி வைத்துள்ளார் என்று நீதிமன்றம் கேள்வி கேட்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement

Related News