தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாடு முழுவதும் சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள், கால்நடைகளை உடனடியாக அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி: நாடு முழுவதும் தெரு நாய்கள் பிரச்சினை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கூடுதல் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு ஏற்கனவே பிறப்பித்து இருந்த நிலையில், இன்றைய தினம் நீதிபதிகள் வேறு சில முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளனர். அதன்படி, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள், கால்நடைகள் உட்பட அனைத்து விலங்குகளையும் உடனடியாக பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதனை உரிய காப்பகத்தில் விட வேண்டும். இது தொடர்பாக நெடுஞ்சாலை ரோந்து குழுவை அமைக்க அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து மேலும் உத்தரவிட்டுள்ள நீதிமன்றம்; நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள், ரயில்வே நிலையங்களில் தெருநாய்கள் நுழைய முடியாத அளவுக்கு வேலிகள் அமைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2 வாரங்களில் தெரு நாய்களைக் கண்டறிந்து, 8 வாரங்களுக்குள் மாநில அரசு இதை மேற்கொள்ள வேண்டும். தெருநாய்கள் குறித்து தகவல் அளிக்க ரோந்து குழு ஒன்றை அமைக்க வேண்டும். மேலும், அப்புறப்படுத்திய நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, கருத்தடை செய்து காப்பகத்தில் சேர்க்க வேண்டும். தொல்லை தரும் இடங்களில் பிடிக்கப்பட்ட தெரு நாய்களை அங்கேயே விடுவது, அதன் மொத்த நோக்கத்தையே சிதைத்து விடும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

Related News