தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இண்டிகோ விவகாரத்தில் நீதிமன்றம் அவசரமாக தலையிட வேண்டிய அவசியம் இல்லை ; ஒன்றிய அரசே கையாளட்டும் : உச்சநீதிமன்றம்

டெல்லி : இண்டிகோ விவகாரத்தில் நீதிமன்றம் அவசரமாக தலையிட வேண்டிய அவசியம் இல்லை ; ஒன்றிய அரசே கையாளட்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விமானிகள் பணி நேரம் தொடர்பான புதிய விதிமுறைகள் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், அதற்கேற்ப போதிய விமானிகளை நியமிக்காமலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமலும் இண்டிகோ நிறுவனம் அலட்சியமாக செயல்பட்டது. இதன் விளைவாக நாடு முழுவதும் கடந்த 7 நாட்களாக இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் தவிக்கும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக, திருமணம் மற்றும் குளிர்கால விடுமுறை நாட்களில் ஏற்பட்ட இந்தத் தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் மற்ற விமானங்களிலும் கட்டணங்கள் தாறுமாறாக உயர்ந்தன. பயணிகளின் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.610 கோடி கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிலையில் விமான சேவை பாதிப்புகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்தார். 2500 விமான சேவைகள் முடங்கி உள்ளதாகவும் 95 விமான நிலையங்கள் பாதிப்படைந்துள்ளன என்றும் வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதை கேட்ட உச்சநீதிமன்றம், இண்டிகோ விமான சேவை முடக்கத்தால், பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்துள்ளதாகவும் இது மிக தீவிரமான பிரச்சனை என்றும் தெரிவித்தது. ஒன்றிய அரசு தற்போது நடவடிக்கை எடுத்து வருவதை அறிவதாகவும் ஒன்றிய அரசே அதை கையாளட்டும் என்றும் இண்டிகோ விவகாரத்தில் நீதிமன்றம் அவசரமாக தலையிட வேண்டிய நிலை தற்போது இல்லை என்றும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

Advertisement

Related News