தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வழக்கு விவரங்களை அறிய வழக்கறிஞர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பக்கூடாது : உச்சநீதிமன்றம்

டெல்லி: குற்றம் சாட்டப்பட்டவருக்கு சட்ட அறிவுரைகளை வழங்கும் வழக்கறிஞர்களுக்கு தன்னிச்சையாக சம்மன் அனுப்பக்கூடாது என அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் பிரபல மூத்த வழக்கறிஞர்களான அரவிந்த் தாதர் மற்றும் பிரதாப் வேணுகோபால் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. வழக்கறிஞர்களுக்கு தன்னிச்சையாக சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

Advertisement

இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் மற்றும் நீதிபதி என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய உத்தரவில், "உரிய காரணமின்றி, வழக்கு விவரங்களை அறிய வழக்கறிஞர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பக்கூடாது. விசாரணை அமைப்புகள் வழக்கறிஞர்களுக்கு தன்னிச்சையாக சம்மன் அனுப்பக் கூடாது. சம்மன் அனுப்பினால் எந்த விதியின் கீழ் அனுப்பப்படுகிறது என்பதை விசாரணை அமைப்பு தெரியப்படுத்த வேண்டும். எஸ்.பி. அந்தஸ்திலான மூத்த அதிகாரியின் ஒப்புதல் பெற்ற பிறகே விதிவிலக்கான சம்மனும் அனுப்பப்பட வேண்டும்.

விதிவிலக்காக சம்மன் அனுப்புவதற்கான காரணத்தை எழுத்துப் பூர்வமாக அதிகாரி ஒப்புதல் அளிக்க வேண்டும். விதிவிலக்காக அனுப்பப்படும் சம்மனும் உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டதே. வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர், வழக்கு விவரங்களை தெரிவிக்கக் கூடாது என்ற கடமை உள்ளது. நீதிமன்றங்களில் தொழில் புரியாமல் நிறுவனத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட மாட்டாது. வழக்கறிஞர்களிடம் இருந்து கைப்பற்றப்படும் டிஜிட்டல் ஆவணங்கள் நீதிமன்றத்தில் முன்பாக மட்டுமே ஆய்வு செய்யப்பட வேண்டும். "இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Related News