தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை உறுதிசெய்ய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி : 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை உறுதிசெய்ய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில், பீகார் மாநில ஜாமின் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை தொடங்காமல் இருப்பதை கண்டு உச்சநீதிமன்றம் அதிர்ச்சி அடைந்தது. இதனால், குற்றவாளிகள் ஜாமின் பெற முடியாமல் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இதே போன்று 650 வழக்குகள் உள்ளதாக, உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் அமர்வு சுட்டிக்காட்டி மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும் தெரியவந்தது.

Advertisement

இதனைத் தொடர்ந்து நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு, 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக நாடு முழுவதும் வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டியது அவசியமாக உள்ளது என்று தெரிவித்தது. பின்னர் வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் கருத்துக்களை வழங்க முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து, மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா ஆகியோரை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது கருத்துக்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

Advertisement

Related News