சூரிய ஒளி மற்றும் கடல்நீரை பயன்படுத்தி குடிநீர் உற்பத்தி செய்யும் முறை: ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் புதிய முயற்சி
இதுதொடர்பாக சென்னை ஐஐடி இயந்திர பொறியியல் துறையின் பேராசிரியர் அத்வைத் சங்கர் கூறியதாவது: இந்த தொழில்நுட்பத்தை விரிவாக்கும்போது, செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவுகள் உள்பட சிக்கனமானதாக இருக்கும். குடியிருப்பு காலனிகள் அல்லது கல்வி வளாகங்களுக்கு இது நன்றாக வேலை செய்யும். தொழில்துறை கழிவு வெப்பத்தை சூரிய சக்தியுடன் இணைக்கலாம். இந்த ஆலை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு சுமார் 300 லிட்டர் நன்னீரை உற்பத்தி செய்கிறது, இதில் உப்பின் அளவு ஒரு மில்லியனுக்கு 1 பங்கு மட்டுமே உள்ளது. தோட்டம் மற்றும் கழிப்பறை பயன்பாட்டிற்காக சமையலறை கழிவுநீரை மறுசுழற்சி செய்ய சாம்பல் நீர் சுத்திகரிப்பு பிரிவையும் அவர்கள் உருவாக்கி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.