தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில் மோர்ருக்கு உடல் ரிதியாக பல பிரச்சனைகள் வர வாய்ப்பு: நாசா தகவல்

வாஷிங்டன்: விண்வெளியில் சிக்கித்தவித்துவரும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில் மோர் ஆகியோருக்கு உடல் ரிதியாக பல பிரச்சனைகள் வர வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்திய வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில் மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5ம் தேதி விண்வெளிக்கு சென்றனர். சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு பணிகளை முடித்து கொண்டு கடந்த 13ம் தேதி ஊமிகு திரும்பும் வகையில் பயணத்திட்டம் வரையறுக்கப்பட்டிருந்தது.
Advertisement

ஆனால் சில தொழில் நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்பும் பயணம் ஒத்திவைக்கபட்டது. தொடர்ந்து 26ம் தேதி அவர்கள் பயணித்த ஸ்டார் லைன் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதனால் தற்போதும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில் மோர் பூமிக்கு செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. சரியாக 7 நாட்களுக்கு விண்வெளி மையத்தில் தங்கி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த திட்டம் 50 நாட்களை கடந்துள்ளது.

இருவரையும் மீண்டும் பூமிக்கு அழைத்துவர நாசா முயற்சித்து வருகிறது. இந்நிலையில் விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்தாலும் இருவரும் உடல் ரீதியாக பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாததால் இயல்பாகவே உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். இப்படி இருக்க அதிக நாட்களுக்கு விண்வெளியில் இருப்பது உடலில் பல மாற்றங்களுக்கு வழி வகுக்கின்றன. புவி ஈர்ப்பு விசை இல்லாததன் காரணமாக உடலின் தசை நார்கள் மற்றும் எலும்புகள் விரைவில் வலுவிழக்கின்றன.

விண்வெளியில் இருப்பவர்கள் எடையை உணராததால் உடலை சுமந்து இயக்கும் எலும்புகளின் செயல்பாடு மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதனால் கடுமையான விளைவுகள் ஏற்படும். விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் முறையான பயிற்சிகளுக்கு பிறகே அனுப்பிவைக்கப்படுகின்றனர். அதற்கேற்றபடி உடற்பயிற்சிகள் செய்தாலும் எலும்பில் ஏற்படும் இந்த பிரச்சனை எலும்பு முறிவுக்கே வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. அதே போல் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் மேலும் புவி ஈர்ப்பு விசை இல்லாததால் சிறுநீரகத்தில் கால்சியம் அளவு அதிகரித்து சிறுநீரக கற்கள் உண்டாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

மேலும் புற்றுநோய் வருவதற்கான பல சாத்திய கூறுகள் அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். உடல் ரீதியாக ஏற்படும் இந்த மாற்றங்களை புரிந்து கொள்வது சந்திக்கும் சவால்களை கையாள உதவும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக இந்த விண்கலம் எங்களை பூமிக்கு கொண்டு சேர்க்கும் என்பதை நான் நம்புகிறேன். எந்த பிரச்சனையும் இல்லை என்ற நல்ல உணர்வு என் இதயத்தில் இருக்கிறது என்று சுனிதா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News