தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூகுள் நிறுவன CEO சுந்தர் பிச்சை பயின்ற ஐஐடி வனவானி பள்ளி விரைவில் மூடப்படும் என தகவல்..!!

கூகுள் நிறுவன CEO சுந்தர் பிச்சை பயின்ற ஐஐடி வனவானி பள்ளி விரைவில் மூடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்காக மறைந்த முதலமைச்சர் காமராஜரால் 1963ம் ஆண்டில் வனவானி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி திறந்துவைக்கப்பட்டது. 52 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கூகுள் நிறுவன CEO சுந்தர் பிச்சை, சார்ஜ்பி CEO க்ரிஷ் சுப்பிரமணியன்.

Advertisement

இயக்குனர் விக்னேஷ் சிவன், பிரியங்கா பங்கஜம் ஐஏஎஸ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வனவானி பள்ளியில் பயின்றவர்கள் தான்.உலகின் தலைசிறந்த ஜாம்பவான்களை உருவாக்கிய இந்த வனவானி பள்ளி இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மூடப்படும் சூழல் உருவாகி உள்ளயது. தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் அடிப்படையில் இயங்கி வரும் இந்த பள்ளி இரு மொழி கல்வி திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்தி மொழியை கற்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் கட்டாய படுத்துவதாகவும் யுகேஜியில் ஆங்கிலத்திற்கு அடுத்து இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

பள்ளியை மூடுவதற்கான மறைமுக வேலைகள் நடந்து வருவதாக பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர். நடப்பாண்டு எல்கேஜி ,யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை பள்ளி நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐஐடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த பள்ளியை அரசே தனது கட்டுப்பாட்டில் எடுத்து பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Advertisement

Related News