தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

13ஆயிரம் ஏக்கரில் நாற்று நடப்பட்டு கோடை நெல் சாகுபடி தீவிரம்

Advertisement

*மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள்

தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 25 ஆயிரம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 13 ஆயிரம் ஏக்கரை தாண்டி நடவு பணி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது.

இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை, திருவையாறு, பூதலூர், கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, போராவூரணி, அதினாம்பட்டினம், சேதுபவாசத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கோடை நெல் சாகுபடி பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நெல் மட்டுமின்றி கரும்பு, வாழை, எள், உளுந்து, சோளம், வெற்றிலை உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது.

ஆனால் பரவலாக மாவட்டம் முழுவதும் நெல் தான் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படும். இந்த நிலையில் தற்போது கோடை நெல் சாகுபடியானது தஞ்சை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். அதன்படி கடந்த ஆண்டு தாமதமாக ஜூலை மாதம் 28ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவு நடை பெறவில்லை. சம்பா, தாளடி சாகுபடி 3 லட்சத்து 23 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்றது.

தற்போது மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்பு உள்ளன.இதனால் தற்போது தஞ்சை மாவட்டத்தில் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது பெரும்பாலான இடங்களில் ஆழ்துளை கிணறு உள்ள பகுதிகளில் மட்டும் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முன்பட்ட குறுவை சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக தஞ்சை மாவட் டத்தில் பல்வேறு இடங்களில் பாய்நாற்றங்கால் தயார் செய்யப்பட்டு நடவுப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 91 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல்வேறு இடங்களில் உழவுப்பணிகள், நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் 500 ஏக்கருக்கும் குறைவாகவே அறுவடை பணிகள் நடைபெற வேண்டி உள்ளது.

அதுவும் இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடையும். தற்போது வரை தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடியில் எக்டேருக்கு 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைத்து வருகிறது. தற்போது கோடை சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு தேவையான விதை நெல், உரம் மற்றும் வேளாண் இடுபொருட்கள் போதுமான அளவு இருப்புவைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குறுவை சாகுபடி அதிக அளவு நடைபெறும் என வேளாண்மைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News