தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோடை வெயிலால் ஆழியார் அணை பூங்காவுக்கு பயணிகள் வருகை குறைந்தது

Advertisement

*வியாபாரிகள் கவலை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டது.

பொள்ளாச்சியை அடுத்த ஆழியாருக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இங்கு வரும் பயணிகள் அணையின் இயற்கை அழகை ரசித்தும், படகு சவாரி செய்தும், பூங்காவில் குடும்பத்துடன் பொழுதை கழிக்கின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை வெயலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. இதனால், ஜனவரி இறுதி வரை ஆழியார் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. ஆனால், பிப்ரவரி மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் ஆழியாருக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவானது. விடுமுறை நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவு இருந்தது.

இந்த நிலையில் நேற்றும், வெயிலின் தாக்கத்தால் குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஒரு சிலர் மட்டும் அணையின் மேல் பகுதியில் அங்குமிங்குமாக சுற்றித்தறிந்தனர்.

மேலும், அணைக்கு முன்பாக உள்ள பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் குறைந்த அளவிலே இருந்தனர். இதனால் பூங்காவின் பெரும் பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த மாதம் துவக்கத்தில் ஆழியார் அணைப்பகுதிக்கு தினமும் சுமார் 2500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.

ஆனால், கடந்த சில வாரமாக விடுமுறை நாட்களை தவிர பிற நாட்களில், சுற்றுலா பயணிகள் வருகை 1000க்கும் குறைவாக இருந்துள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் மட்டுமின்றி, பள்ளிகளுக்கு தேர்வு என்பதால், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக உள்ளது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

Related News