தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூலூர் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சூலூர்: சூலூர் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம், சூலூரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான படைத்தளம் அமைந்துள்ளது. இங்கு போர் விமானங்கள் மற்றும் பயிற்சி விமானங்கள் அதனுடன் விமானம் பழுது நீக்கும் மையமும் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு நிலைகளில் வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் நேற்று அதிகாலை 6 மணிக்கு விமானப்படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவலறிந்து சூலூர் போலீசார் விமானப் படைத்தளத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த சானு (47) என்றும், கிராப்பல் நிலை வீரராக பதவி வகித்த இவருக்கு இந்துலேகா என்ற மனைவியும், 17 வயதில் ஒரு மகன், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்று தெரிய வந்தது.

இந்நிலையில் சானுவின் மனைவி இந்துலேகா(42) சூலூர் போலீசில் அளித்துள்ள மனுவில், ‘இரு வாரங்களுக்கு முன் கணவர் ஊருக்கு வந்த போது, கொஞ்சம் மன அழுத்தத்துடன் இருப்பதாக கூறினார். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் கவுன்சலிங் பெற்றார்.அப்போது மருத்துவர் ஒரு வாரம் சாப்பிட சொல்லி மாத்திரை அளித்தார். ஆனால் அவர் 2 நாள் மட்டுமே சாப்பிட்டு விட்டு, மாத்திரைகளை சாப்பிட மறுத்து விட்டார். கடந்த 12ம் தேதி மீண்டும் வேலைக்கு சென்றார்.

இன்று (நேற்று) காலை கணவருடன் பணியாற்றும் ஸ்ரீவல்சன் என்பவர் எனக்கு போன் செய்து காலை 6.10 மணிக்கு வாட்ச் டவரில் ஏறி சானு கழுத்தில் ஏ.கே.103 துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். கணவர் மன அழுத்தம் காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது மரணத்தில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News