தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூலூரில் வீட்டின் கதவை உடைத்து நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளை

சூலூர் : கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் சிவசாமி (40). இவர் சூலூரில் உள்ள தனியார் கோதுமை ரவை தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் அவருக்கு சடங்குகள் செய்வதற்காக கடந்த நான்கு நாட்களுக்கு முன் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

Advertisement

வீட்டை பூட்டிச் சென்று இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார் .வீட்டிற்கு வந்த சிவகுமாருக்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதைத்தொடர்ந்து வீட்டிலிருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. இது தொடர்பாக சிவகுமார் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.

மேலும் அவரது வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது அவர் வீட்டிற்கு வருவதற்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்னால் தான் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்வது பதிவாகியிருந்தது. சிசிடிவி பதிவுகளையும் கைப்பற்றிய போலீசார் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Advertisement

Related News