தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சூலூர் அருகே அடுத்தடுத்து கார்கள் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம்

சூலூர் : சூலூர் அருகே தொடர்ந்து 3 கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். கோவை மாவட்டம் சூலூர் ஆறுபடை முருகன் கோயில் அருகே உடுமலைப்பேட்டையை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தனது காரை ஒரு பாதையில் இருந்து மற்றொரு பாதைக்கு வளைவில் திருப்ப முயன்றார்.

அப்போது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வந்த பார்ச்சுனர் வாகனம் ஒன்று அதிவேகமாக இந்த கார் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்த கார் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது.

இந்த சம்பவம் நடந்தவுடன் அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக காரில் இருந்தவர்களை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒரு காரில் வந்த காரைக்குடியை சேர்ந்த ஓட்டுனர் முகமது ஆசிப் (26), லட்சுமணன், அவரது மனைவி தெய்வானை ஆகியோர் காயமடைந்தனர். மேலும் பழநியில் இருந்து வந்த காரில் இருந்த ராகுல், (18), ரமேஷ், கவிதா, ரேணுகா, தண்டபாணி, நந்தினி, கலாவதி உள்ளிட்டோர் காயமடைந்தனர்.

இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக கோவை திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் விபத்து ஏற்படுத்திய வாகனங்களை அப்புறப்படுத்தி தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலை செய்யாத ஏர்பேக்

சூலூரில் நேற்று 3 கார்கள் தொடர்ந்து அடுத்தடுத்து மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் விலை உயர்ந்த சொகுசு காரான பார்ச்சுனர் காரில் இருந்த ஏர்பேக் விபத்திற்கு பின்னர் திறக்கவில்லை.

இது செயல்படாததால் தான் அந்த வாகனத்தில் வந்த இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இந்நிலையில் பயங்கரமாக அடுத்தடுத்து மோதிய சம்பவத்தில், காரில் ஏர்பேக் ஓபன் ஆகாதது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related News