தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழநியில் படிப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு சுடச்சுட சுக்கு காபி

 

Advertisement

பழநி: பழநியில் படிப்பாதை வழி செல்லும் பக்தர்களுக்கு சுடச்சுட சுக்கு காபி விநியோகிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில், நேற்று கார்த்திகை மாதம் துவங்கியதைத் தொடர்ந்து, ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். கடந்த சில நாட்களாக ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களின் வருகை இருந்த நிலையில், தற்போது தமிழக ஐயப்ப பக்தர்களின் வருகையும் துவங்கி உள்ளது. இதனால் பழநி நகரம் களைகட்ட துவங்கி உள்ளது. மேலும், பழநி மலைக்கோயிலுக்கு படிப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்கள் களைப்பை குறைக்கும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் இலவசமாக மோர் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது ஐயப்ப சீசன் துவங்கி உள்ளதால், தினமும் அதிகாலை 4.30 மணி முதலே ஏராளமான ஐயப்ப பக்தர்கள் படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்று வருகின்றனர். தற்போது அதிகாலை வேளையில் பனி தாக்கத்தால் கடுங்குளிரும், அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இதனால் தற்போது பழநி கோயில் நிர்வாகம் சார்பில் படிப்பாதையில் பக்தர்களுக்கு சுடச்சுட சுக்கு காபி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதிகாலை 4 மணி முதல் பகல் 1 மணி வரை சுக்கு காபி வழங்கப்படுகிறது. யானைப்பாதையில் இடும்பர் சன்னதி அருகில் பக்தர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement