தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் தற்கொலை: காஞ்சியை சேர்ந்தவர்

 

Advertisement

நாகை: காஞ்சிபுரம் மாவட்டம் கோட்டூரை சேர்ந்த வேல்முருகன் மகன் நிஷாந்த்(22). நாகை அரசு மருத்துவக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார். செமஸ்டர் தேர்வில் ஒரு பாடத்தில் நிஷாந்த் தோல்வியடைந்தார். மீண்டும் அந்த தேர்வில் வெற்றி பெற்றால் தான் 3ம் ஆண்டு செல்ல முடியும் என்ற நிலையில் மன விரக்தியில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு படிப்பதற்காக அங்குள்ள தனி அறைக்கு சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை. சக மாணவர்கள் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர்.

ஆனால் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாணவர்கள், விடுதி அறை கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அவர் மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கினார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து ஏற்கனவே நிஷாந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News