தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சரணடைய அவகாசம் கேட்ட நிலையில் ‘கடைசி மூச்சு உள்ளவரை போரிடுவோம்’: நக்சல்களின் திடீர் முழக்கத்தால் பரபரப்பு

Advertisement

புதுடெல்லி: கடந்த ஓராண்டில் பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கையால் நக்சல்கள் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக, கடந்த நவம்பர் மாதம் நக்சல் முக்கிய தளபதி மத்வி ஹித்மா கொல்லப்பட்டது அந்த இயக்கத்திற்குப் பேரிழப்பாக அமைந்தது. இதுவரை உயர்மட்டத் தலைவர்கள் உட்பட 320க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், சட்டீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநில அரசின் மறுவாழ்வுத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு நூற்றுக்கணக்கானோர் சரணடைந்து வருகின்றனர். இதனால் நிலைகுலைந்து போயுள்ள அந்த இயக்கம், தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடி வருகிறது. இந்தச் சூழலில், மகாராஷ்டிரா - மத்தியப் பிரதேசம் - சட்டீஸ்கர் மண்டலக் குழுவினர் தங்கள் உறுப்பினர்கள் சரணடைவதற்காக வரும் பிப்ரவரி 15ம் தேதி வரை தாக்குதல்களை நிறுத்துமாறு மூன்று மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருந்தனர்.

ஆனால், இதற்கு நேர்மாறாக நக்சல்களின் மத்திய படைக் குழு வெளியிட்ட அறிக்கையில், ‘கடைசி மூச்சு உள்ளவரை போரிடுவோம்; சோர்வடைந்துள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்த டிசம்பர் 2 முதல் 8 வரை மக்கள் விடுதலை கொரில்லாப்படை வாரம் அனுசரிக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், ஆயுதம் ஏந்திய நக்சல்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் எனத் தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, ‘எக்காரணத்தைக் கொண்டும் தேடுதல் வேட்டை நிறுத்தப்படாது’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. வரும் 2026 மார்ச் மாதத்திற்குள் நக்சல்கள் ஆதிக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கப் போவதாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உறுதியளித்துள்ள நிலையில், நக்சல்களின் இந்த முரண்பட்ட அறிவிப்புகள் பாதுகாப்பு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement

Related News