தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களுக்கு திடீரென கடும் மூச்சுத் திணறல்; மணலியில் உரத் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதா..? வாயை மூடி, கண்ணை பொத்தி சென்றனர்

திருவொற்றியூர்: சென்னை மணலியில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான எம்எஃப்எல் உரத் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து உரம் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நேற்றிரவு தொழிற்சாலை அருகே உள்ள சாலையில் வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த மக்களுக்கு திடீரென கடும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் பரவியதும் பெரும் பரபரப்பு நிலவியது.

Advertisement

இதுபற்றி விசாரித்தபோது தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு துர்நாற்றம் காரணமாக கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஆகிய பிரச்னை ஏற்பட்டுள்ளது தெரிந்தது. இதனால் பீதி அடைந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோர் முகத்தில் கர்சீப்பை கட்டிக்கொண்டும் கண்களை மூடிக்கொண்டும் தொழிற்சாலையை கடந்து சென்றனர். டி.பி.பி சாலை, மணலி சாலை சந்திப்பில் பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசாருக்கும் கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர்களும் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மணலி போலீசாரும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் வந்து விசாரித்தனர். உரத் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் அமோனியா மூலப் பொருள் புகை போக்கி வழியாக அதிகப்படியாக வெளியேறியதால் அந்த வாயு காற்றில் பரவி தொழிற்சாலை அருகே சென்ற மக்களுக்கு மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

‘’மழைக் காலங்களில் அமோனியா வாயு காற்றில் பரவும் பிரச்னை அடிக்கடி ஏற்படுவதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றும் சமூகநல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Related News