தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திடீர் சமரசத்தால் திருப்பம் நடிகை லட்சுமி மேனன் மீதான ஆள் கடத்தல் வழக்கு தள்ளுபடி: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

 

Advertisement

கொச்சி: பிரபல நடிகை லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் மீதான ஆள் கடத்தல் வழக்கை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் அலியார்ஷா சலீம் என்பவர், கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகை லட்சுமி மேனன் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், கொச்சியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, லட்சுமி மேனனும் அவரது நண்பர்களும் தன்னை பின்தொடர்ந்து வந்து, காரில் கட்டாயப்படுத்தி ஏற்றி தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் லட்சுமி மேனன் கடந்த அக்டோபர் மாதம் முன்ஜாமீன் பெற்றிருந்தார். தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், புகார்தாரர் தன்னையும் தனது தோழியையும் அவதூறாகப் பேசியதாலேயே பிரச்னை ஏற்பட்டதாகவும் லட்சுமி மேனன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.எஸ். தியாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பினரும் நீதிமன்றத்திற்கு வெளியே பேசி சமரசமாக செல்வதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து புகார்தாரரான அலியார்ஷா சலீம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘தவறான புரிதல் காரணமாகவே இந்த புகார் அளிக்கப்பட்டது; தங்களுக்குள் இருந்த பிரச்னையை பேசித் தீர்த்துக் கொண்டதால் வழக்கை முடித்து வைப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, நடிகை லட்சுமி மேனன் தாக்கல் செய்த மனுவை ஏற்று, அவருக்கு எதிரான ஆள் கடத்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement

Related News