தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூடானில் வெள்ளப்பெருக்கு; அணை உடைந்து 60 பேர் பரிதாப பலி: 200க்கும் மேற்பட்டோர் கதி என்ன?

அர்பாத்: சூடானில் ஏற்பட்ட வெள்ளப்ெபருக்கால் அணை உடைந்து 60 பேர் பலியான நிலையில், 200க்கும் மேற்பட்டோர் கதி குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. சூடான் நாட்டில் ஏற்கனவே கடந்தாண்டு ஏப்ரல் முதல் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே மோதல்கள் இருந்து வருகிறது. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில், தற்போது பெய்து வரும் கனமழையால் மேலும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் வெள்ளத்தில் சிக்கி 132 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,18,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Advertisement

இந்நிலையில் செங்கடல் அருகே உள்ள அர்பாத் அணைப் பகுதியில் பெய்த கனமழையால், அணையானது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சுமார் 20 கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததாகவும், 50 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அர்பாத் அணை 25 மில்லியன் கன மீட்டர் கொள்ளளவு கொண்டது. சூடானின் முக்கிய குடிநீர் ஆதாரமாக கடற்கரை நகரம் இருந்தது. இப்போது அர்பாத் அணை அடித்து செல்லப்பட்டதால், மின்கம்பங்கள், குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. தங்கச் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த 150 முதல் 200 பேர் வரை காணவில்லை. சூடானில் அணைகள், சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு முற்றிலும் சேதமடைந்துள்ளதால், நூற்றுக்கணக்கான மக்களின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது.

Advertisement