பராமரிப்பு பணிகள் காரணமாக 23ம் தேதி புறநகர் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
மாதவரம்: பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 23ம் தேதி திருவள்ளூருக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, ரயில் சேவைகளின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்யும் வகையில், திருநின்றவூர் யார்டில் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் பேனல் அமைக்கும் பணிக்காக சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் பிரிவில் லைன் பிளாக்/ பவர் பிளாக் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மதியம் 3.40 மணி வரை மொத்தம் 8 மணி நேரம் 40 நிமிடங்கள் புறநகர் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, வரும் 23ம் தேதி காலை 5.40 மணி மற்றும் காலை 6.10 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை - திருவள்ளூர் மின்சார ரயில், காலை 6.50 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - திருவள்ளூர் மின்சார ரயில், காலை 6.35 மணிக்கு புறப்படும் எண்ணூர் - திருவள்ளூர் மின்சார ரயில், காலை 7.45 மணி, 8.05, 8.40, 9.15, 9.35 ஆகிய நேரங்களில் புறப்படும் மூர் மார்க்கெட் - திருவள்ளூர் மின்சார ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 10 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - திருத்தணி மின்சார ரயில், காலை 9.55 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை - திருவள்ளூர் மின்சார ரயில், காலை 10.30 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - கடம்பத்தூர் மின்சார ரயில், காலை 10.40 மற்றும் 11.30 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - திருவள்ளூர் மின்சார ரயில், காலை 11.45 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - திருத்தணி மின்சார ரயில், மதியம் 12 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - திருவள்ளூர் மின்சார ரயில், மதியம் 12.10 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை - திருத்தணி மின்சார ரயில், மதியம் 12.40 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - அரக்கோணம் மின்சார ரயில், மதியம் 1 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - திருவள்ளூர் மின்சார ரயில், மதியம் 1.05 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை - திருவள்ளூர் மின்சார ரயில், மதியம் 1.25 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - அரக்கோணம் மின்சார ரயில், மதியம் 1.50 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - திருவள்ளூர் மின்சார ரயில், மதியம் 2.15 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - திருத்தணி மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மதியம் 2.25 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை - அரக்கோணம் மின்சார ரயில், மதியம் 2.40 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் - திருவள்ளூர் மின்சார ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. சென்னைக்கு வரும் ரயில்கள்: காலை 6.50 மணிக்கு புறப்படும் திருவள்ளூர் - மூர் மார்க்கெட் மின்சார ரயில், காலை 6.40 மணிக்கு புறப்படும் அரக்கோணம் - மூர் மார்க்கெட் மின்சார ரயில், காலை 7.30 மணிக்கு புறப்படும் திருவள்ளூர் - மூர் மார்க்கெட் மின்சார ரயில், காலை 7.55 மணிக்கு புறப்படும் திருநின்றவூர் - மூர் மார்க்கெட் மின்சார ரயில், காலை 7.10 மணிக்கு புறப்படும் அரக்கோணம் - மூர் மார்க்கெட் மின்சார ரயில், காலை 8.10, 8.20, 8.30, 9.10, 9.25, 10.05 ஆகிய நேரங்களில் புறப்படும் திருவள்ளூர் - மூர் மார்க்கெட் மின்சார ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
காலை 11 மணிக்கு புறப்படும் திருவள்ளூர் - சென்னை கடற்கரை மின்சார ரயில், காலை 11.30 மணிக்கு புறப்படும் திருவள்ளூர் - மூர் மார்க்கெட் மின்சார ரயில், காலை 11.15 மணிக்கு புறப்படும் அரக்கோணம் - மூர் மார்க்கெட் மின்சார ரயில், மதியம் 12 மணிக்கு புறப்படும் திருவள்ளூர் - ஆவடி மின்சார ரயில், மதியம் 12.05 மணிக்கு புறப்படும் கடம்பத்தூர் - சென்னை கடற்கரை மின்சார ரயில், மதியம் 12 மணிக்கு புறப்படும் அரக்கோணம் - மூர் மார்க்கெட் மின்சார ரயில், மதியம் 1.05 மணிக்கு புறப்படும் திருவள்ளூர் - மூர் மார்க்கெட் மின்சார ரயில், மதியம் 1.30 மணிக்கு புறப்படும் திருவள்ளூர் - சென்னை கடற்கரை மின்சார ரயில், மதியம் 12.35 மணிக்கு புறப்படும் திருத்தணி - மூர் மார்க்கெட் மின்சார ரயில், மதியம் 1.40 மணிக்கு புறப்படும் அரக்கோணம் - மூர் மார்க்கெட் மின்சார ரயில், மதியம் 2.40 மற்றும் 3.05 மணிக்கு புறப்படும் திருவள்ளூர் - மூர் மார்க்கெட் மின்சார ரயில், காலை 5 மணிக்கு புறப்படும் ஆவடி - எண்ணூர் மின்சார ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக, பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் சென்னையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்கள்: காலை 6.30 மணிக்கு மூர் மார்க்கெட் - அரக்கோணம், காலை 7 மணிக்கு மூர் மார்க்கெட் - திருத்தணி, காலை 7.25 மணிக்கு மூர் மார்க்கெட் - திருத்தணி, காலை 8.20 மணிக்கு மூர் மார்க்கெட் - அரக்கோணம், காலை 9.10 மணிக்கு மூர் மார்க்கெட் - திருத்தணி, காலை 9.50 மணிக்கு மூர் மார்க்கெட் - திருப்பதி, காலை 11 மணிக்கு மூர் மார்க்கெட் - அரக்கோணம், காலை 10.45 மணிக்கு மூர் மார்க்கெட் - ஆவடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னைக்கு வரும் சிறப்பு ரயில்கள்: காலை 7 மணிக்கு திருவள்ளூர் - மூர் மார்க்கெட், காலை 6.20 மணிக்கு அரக்கோணம் - சென்னை கடற்கரை, காலை 7.35 மணிக்கு அரக்கோணம் - சென்னை கடற்கரை, காலை 8 மணிக்கு அரக்கோணம் - சென்னை கடற்கரை, காலை 8.15 மணிக்கு அரக்கோணம் - மூர் மார்க்கெட்டிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.