தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தில் முதியோர் இல்லங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

Advertisement

*உடற்பயிற்சி அளிக்க கலெக்டர் அறிவுரை

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் முதியோர் இல்லங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் தளவாய்பாளையம் டி.என்.நகர். காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் நினைவு முதியோர் இல்லம் மற்றும் கல்லுக்குளம் பூக்காரத்தெரு புனித வின்சென்ட் தே பவுல் சபை ஓசானாம் முதியோர் இல்லங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் தளவாய் பாளையம் டி.என்.நகர் காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் நினைவு முதியோர் இல்லம் மற்றும் கல்லுக்குளம் பூக்காரத்தெரு புனித வின்சென்ட் தே பவுல் சபை ஓசானாம் முதியோர் இல்லங்களில் தங்கியுள்ள முதியோர்களுடன் மாவட்ட கலெக்டர் நேரில் கலந்துரையாடி, அவர்களின் தேவைகள் மற்றும் குடும்ப சூழ்நிலைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

மேலும், முதியோர் இல்லங்களின் சமையலறை, தங்கும் அறை, வரவேற்பறை, வருகைப் பதிவேடு, முதியோர்களுக்கு வழங்கப்படும் உணவு, மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்தும் அலுவலர்களிடமிருந்து தகவல் பெற்று அவற்றை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

முதியோர்கள் எத்தனை நபர்கள் தங்கியிருக்கின்றனர் என்பது குறித்தும், அவர்களுக்கு நாள்தோறும் வழங்கப்படும் உணவுப் பட்டியல் குறித்து, மேலும் வயதான மற்றும் நோயாளி முதியோருக்குக் கிடைக்கும் தொடர்ச்சியான சிகிச்சை முறைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் காப்பாளர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், அங்கு தங்கி உள்ள முதியோர்களின் உடல்நிலையை அடிப்படையாகக் கொண்டு, அவர்களுக்கு சிறிய சிறிய உடற்பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், இதன் மூலம் முதியோர்களுக்கு புதிய தன்னம்பிக்கை உருவாகும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, தஞ்சாவூர் வட்டாட்சியர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News