மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சமீபத்தில் நடந்த நீட் தேர்வு முறைகேடுகள், நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளது. பல மாநிலங்களும் இந்த தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்க தொடங்கியுள்ளது. இதைகருத்தில் கொண்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று நீட் தேர்வு முறையை ரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிப்பதற்கான சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கவேண்டும். தேசிய அளவில் நீட் தேர்வு முறையைக் கைவிடும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் உரிய திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் நகலை தனது கடிதத்துடன் இணைத்து அனுப்பி உள்ளேன். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி விரைந்து தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.