தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் பிரசாரத்தில் உயிரிழப்பு பள்ளியில் அக்கா, தங்கைக்கு அஞ்சலி செலுத்திய மாணவர்கள்: தேம்பி தேம்பி அழுத தம்பியால் சோகம்

 

Advertisement

கருர்: விஜய் பிரசாரத்தில் அக்கா, தங்கை உயிரிழந்தனர். அவர்கள் படித்த பள்ளியில் சக மாணவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்களது தம்பி தேம்பி, தேம்பி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி வேலுச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த பெருமாள், செல்வராணி தம்பதியின் மகள்கள் பழனியம்மாள் (11), கோகிலா (6) ஆகியோரும் பலியாகினர். ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பழனியம்மாள் 6ம் வகுப்பும், கோகிலா 3ம்வகுப்பும் படித்து வந்தனர். இதே பள்ளியில் இவர்களின் தம்பி லோகேஸ்வரன் (5) 1ம் வகுப்பு படித்து வருகிறான்.

காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த பள்ளியில் பயின்ற சகோதரிகள் இருவரும் நெரிசலில் சிக்கி இறந்ததற்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பள்ளி வளாகத்தில் நேற்று காலை சிறுமிகள் இருவரின் உருவப்படங்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ஷகிலா தலைமையில் சிறுமிகளின் பெற்றோர் மற்றும் அனைத்து மாணவ, மாணவிகளும் அஞ்சலி செலுத்தினர். தனது 2 அக்காவின் படத்திற்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்துவதை பார்த்து ேலாகேஸ்வரன் தேம்பி தேம்பி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர் பெற்றோர் அவனை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

 

Advertisement