தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீட் முறைகேடு விசாரிக்கக்கோரி ஒன்றிய கல்வி அமைச்சகம் அருகே மாணவர்கள் போராட்டம்

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்கக் கோரி டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சகம் அருகே மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நடந்து முடிந்த நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக நாடு முழுவதும் மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
Advertisement

அரியானாவில் ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 67 பேர் முதல் மதிப்பெண் பெற்றிருப்பதும் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீட் தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சகம் அருகே இடதுசாரி மாணவர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் அவிஜித் கோஸ் கூறுகையில், ‘‘நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். நுழைவுத் தேர்வுகளின் நேர்மையை உறுதி செய்ய நம்பகமான மற்றும் பாதுகாப்பான தேர்வு முறையை நிறுவுமாறு அமைச்சகத்தை வலியுறுத்துகிறோம்’’ என்றார்.

Advertisement