தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே ஆபத்தான முறையில் சாலையை கடந்து செல்லும் மாணவிகள்; இருபுறமும் வேகத்தடை அமைக்க கோரிக்கை

திருவள்ளூர்: அரசு மேல்நிலை பள்ளி எதிரே சாலையின் இருபுறமும் வேக தடை அமைக்கவும், போக்குவரத்து காவலரை நியமிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். ஆனால் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி பேருந்தில் செல்கின்றனர். இந்நிலையில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் அரசு கால்நடை மருத்துவமனை எதிரே வி.எம். நகர் பகுதியில் இருக்கும் ஆர்.எம்.ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இவர்கள் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பெரியகுப்பம், மணவாளநகர், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், போளிவாக்கம், கீழ் நல்லாத்தூர், ஈக்காடு, புல்லரம்பாக்கம், பூண்டி ஆகிய பகுதிகளிலிருந்தும் வந்து செல்கின்றனர். இவ்வாறு அரசு மற்றும் தனியார் பேருந்தில் வரும் மாணவிகள் திருவள்ளூர் அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் தலைமை தபால் நிலையம் அருகே இறங்கி சாலையை கடந்து பள்ளிக்கு செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலை என்பதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக செல்கின்றது. இதனால் சாலையை கடக்கும் மாணவிகள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் அதிக அளவில் உள்ளது.

இதனால் இப்பகுதியில் சாலையின் இரு புறத்திலும் வேகத்தடை அமைத்து காலை பள்ளிக்கு செல்லும் போதும் மாலை பள்ளி விட்டு வீட்டிற்கு திரும்பி செல்லும் போதும் போக்குவரத்து காவலரை பணியில் அமர்த்தி விபத்துகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.