தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இரு கைகளையும் இழந்த மாணவன் 471 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி: உறுப்பு மாற்று சிகிச்சைக்கு முதல்வர் ஏற்பாடு

Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே இரு கைகளையும் இழந்த அரசு பள்ளி மாணவன், பிளஸ் 2 தேர்வில் 471 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து, அவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார். கிருஷ்ணகிரி அருகே ஜீனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கீர்த்திவர்மா(18). இவர், குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார். சிறு வயதில் ஏற்பட்ட மின் விபத்தில், இவரது இரு கைகளும் முழங்கை அளவில் எடுக்கப்பட்டது. மேலும், இவரது இடது காலில் மூன்று விரல்கள் அகற்றப்பட்டன. தாயின் அரவணைப்பில் வளரும் மாணவருக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாக இருந்தது. கைகள் இல்லாத நிலையில் ஓவியம் வரைதல் உள்ளிட்ட திறமைகளுடன் இருந்து வந்தார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்ற அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பாராட்டினர்.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வில் சொல்வதை எழுதுபவர்கள் துணையுடன் தேர்வை சந்தித்து 600க்கு 471 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இதுகுறித்து மாணவர் கீர்த்திவர்மா கூறுகையில், ‘நான் சிறு வயதில் இருந்தே நன்றாக படிப்பேன். பிளஸ் 2 தேர்வில் 471 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். எனக்கு பி.இ., ரோபோடிக்ஸ் படிக்க ஆசை. அதற்கு எனக்கு கைகள் மீண்டும் கிடைக்கும் வகையில் உறுப்பு மாற்று சிகிச்சை செய்ய தமிழக முதல்வர் உதவ வேண்டும்’ என்றார். இதனையறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “கண்ணீர் வேண்டாம் தம்பி. அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் உங்களுக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளை கவனிக்கச் சொல்லி இருக்கிறேன்’’ என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, நேற்று மாலை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், மருத்துவக்குழு மற்றும் ஆசிரியர்களுடன் ஜீனூரில் மாணவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து கலெக்டர் கூறுகையில், ‘முதல்வரின் உத்தரவின்பேரில் மாணவனுக்கு உயர்கல்விக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். மருத்துவத்துறை உதவியுடன் உறுப்பு மாற்று சிகிச்சை ஏற்பாடு செய்யப்படும். வீட்டுமனை பட்டா, வீடு கட்டுவதற்கான கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ஆணை வழங்கப்படும்’ என்றார். மேலும், மாணவரின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட கலெக்டர் தனது சொந்த நிதியில் இருந்து கீர்த்திவர்மாவிற்கு உடனடியாக புதிய மடிக்கணினியை வழங்கினார். இதேபோல், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ, மாணவர் கீர்த்திவர்மாவிற்கு ரூ.25 ஆயிரம் நிதியும், திருக்குறள் புத்தகமும் வழங்கினார்.

 

Advertisement

Related News