தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாணவி படிப்புக்கு ரூ1.70 லட்சம் உதவி: கே.பி.சங்கர் எம்எல்ஏ வழங்கினார்

 

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எண்ணூர், தாழங்குப்பம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் பாஸ்கர். இவர் சலவைத் தொழிலாளி. இவரது மகள் இந்துபாஷினி. இவர் எண்ணூரில் உள்ள வ.உ.சி பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 549 மதிப்பெண் பெற்றிருந்தார். அவருக்கு கவரப்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரியில் ஏஐஎம்எல் பிரிவில் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கே.பி.சங்கர் எம்எல்ஏ, இந்துபாஷினியை பாராட்டி, அவரின் பட்டப் படிப்பிற்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 1.70 லட்சம் வழங்கினார்.

இதன்பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாணவ, மாணவிகளின் கல்வி, விளையாட்டு மற்றும் முன்னேற்றத்திற்காக செய்துவரும் திட்டங்களை எடுத்துரைத்து, கல்வி மட்டுமே யாராலும் அழிக்க முடியாத செல்வம் என்பதை உணர்ந்து நன்றாக படிக்க வேண்டும் என்றும் இதற்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.

Related News