தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது

Advertisement

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் பத்தாம் வகுப்பு மாணவியை வீட்டில் இருந்து கடத்திச் சென்று மது கொடுத்து 2 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 14ம் தேதி மாணவி பள்ளிக்கு வரவில்லை. தொடர்ந்து வகுப்பு ஆசிரியை மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். இதையடுத்து பெற்றோர் நடத்திய விசாரணையில் மாணவியை அந்த பகுதியை சேர்ந்த 2 பேர் வீட்டில் இருந்து கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தலப்புழா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் வெளியே சென்றிருந்தபோது 2 பேர் வீட்டுக்கு வந்து மாணவியை மிரட்டி குண்டுக்கட்டாக தூக்கி ஆட்டோவில் கடத்திச் சென்றது தெரியவந்தது. விசாரணையில் மனைவியை கடத்திச் சென்றது அருகிலுள்ள தவிஞ்ஞால் பகுதியை சேர்ந்த முகம்மது ஆஷிக் (25), ஜெயராஜன் (26) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசாரின் தீவிர விசாரணையில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். 2 பேரும் சேர்ந்து மாணவியை வீட்டிலிருந்து கடத்தி அங்குள்ள ஒரு ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கொண்டு சென்று மது கொடுத்து மயக்கி பலாத்காரம் செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பிறகு மாணவியை அவர்கள் வழியில் இறக்கி விட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News