தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளிக்கு செல்ல பயந்து வீட்டு பரணில் பதுங்கல் 7 மணி நேரம் போலீசை தவிக்கவிட்ட மாணவன்

Advertisement

விராலிமலை: புதுகை அருகே பள்ளிக்கு செல்ல பயந்து வீட்டு பரணில் மாணவன் பதுங்கிய சம்பவத்தில் போலீஸ், தீயணைப்பு வீரர்கள் போராட்டம் 7 மணி நேரம் அலைகழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வாதிரிபட்டியை சேர்ந்தவர் முத்து (38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா(31). இவர்களுக்கு 7ம்வகுப்பு படிக்கும் 12வயதில் ஒரு மகளும், அதர்வா (9) என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் அதர்வா வாதிரிப்பட்டி தொடக்க பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த மாணவன் திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் காலை 7 மணி முதல் தேடியும் மாணவன் கிடைக்கவில்லை. தொடர்ந்து பள்ளி சென்று சக மாணவர்களிடம் விசாரித்த போது மாணவன் அங்கும் செல்லவில்லை என தெரியவந்தது.

இதையடுத்து செய்வது அறியாமல் திகைத்த பெற்றோர், அன்னவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அப்பகுதிகளில் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சிறுவன் குளத்திற்கு குளிக்க சென்று சகதியில் சிக்கியிருக்க கூடும் என்ற சந்தேகத்தில் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வாதிரிப்பட்டி சென்ற வீரர்கள் குளத்துக்குள் இறங்கி சல்லடை போட்டு மாணவனை தேடியும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு வந்த பெற்றோர், பரண் மேலிருந்து சத்தம் வருவதை அறிந்து ஏணிப்படி மூலம் பரணுக்கு சென்று பார்த்த போது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்களுக்கு மத்தியில் அதர்வா படுத்து உறங்கி கொண்டிருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக அதர்வாவை கீழே அழைத்து வந்து விசாரித்ததில், பள்ளிக்கு செல்ல மனம் இல்லாததால் பயந்து பரணில் படுத்து கொண்டது தெரிய வந்தது. 7 மணி நேர போட்டத்திற்கு பின்னர் மாணவன் கண்டு பிடிக்கப்பட்டது பெற்றோர் மட்டுமல்லாது போலீசாரும் நிம்மதி அடைந்தனர்.

Advertisement

Related News