தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

12ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திக்கொலை: இளைஞரை கைதுசெய்து போலீசார் விசாரணை

ராமேஸ்வரம்: 12ம் வகுப்பு மாணவி ஷாலினி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் முனிராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை பகுதியை சேர்ந்த மாணவி ஷாலினி இவர் ராமேஸ்வரம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் அதே பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பவர் அந்த பெண்ணை காதலிக்க வற்புறுத்தி உள்ளார். ஆனால் அந்த பெண் காதலிக்க மறுத்துள்ளார். இதை தொடர்ந்து முனிராஜ் அந்த பள்ளி மாணவியை கத்தியால் குத்தி உள்ளார். சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் மாணவி மயங்கி விழுந்தார்.

Advertisement

அருகில் இருந்தவர்கள் அந்த மாணவியை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மருத்துவ பரிசோதனையில் மாணவி உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து ராமேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஷாலினியை கொலை செய்த முனிராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது குறித்து முனிராஜிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்பு முனிராஜ் மீது என்னென்ன வழக்குகள் பதிவு செய்யப்படும் என்பதும் தெரியவரும். மாணவியை பின் தொடர்ந்து முனிராஜ் செல்வது போன்ற புகைப்படம் வெளியாகியது. இந்த சம்பவம் ராமேஸ்வரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News