தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவி கர்ப்பமான விவகாரம் ஸ்ரீவைகுண்டம் அருகே தனியார் பள்ளியை பொதுமக்கள் முற்றுகை

ஸ்ரீவைகுண்டம் : மாணவி கர்ப்பமான விவகாரம் தொடர்பாக ஸ்ரீவை அருகேயுள்ள தனியார் பள்ளியை மாணவியின் உறவினர்களும் ஜமாத் நிர்வாகிகளும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தில் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மணிகண்டன் என்பவர் கணித ஆசிரியராக வேலைபார்த்து வந்தார்.

Advertisement

இவர் கடந்த பிப்ரவரி மாதம் அதே பள்ளியில் படித்த பிளஸ்-1 மாணவி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாக எழுந்த புகாரையடுத்து அவரை பள்ளி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது. இந்நிலையில் அந்த மாணவி தற்போது பிளஸ் 2 படித்து வரும் நிலையில் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பெற்றோர் விசாரித்தபோது ஆசிரியர் மணிகண்டன் தான் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவியை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாணவியின் உறவினர்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்னசங்கர் மற்றும் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்ட குழுவினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் ரத்னசங்கர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement

Related News