தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெரு நாய்கள் தொடர்பான வழக்கு: அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி: தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் 26 மாநில தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தெரு நாய்களின் தொல்லை குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அத்துடன், இது தொடர்பாக தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி பிறப்பித்த உத்தரவில், நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் உள்ள இந்த விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதிகள் அமர்வு முடிவு செய்தது.

Advertisement

மேலும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் வழக்கில் ஒரு தரப்பாக சேர்த்து, பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தெரு நாய்கள் தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு தெலங்கானா, மேற்கு வங்கம் மற்றும் டெல்லி மாநகராட்சி நிர்வாகம் மட்டுமே பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாததற்கான விளக்கத்தை அளிக்க, தமிழ்நாடு உள்பட 26 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும், 8 யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களும் வருகின்ற நவம்பர் 3ம் தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது பற்றி ஏன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என விளக்கம் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ள டெல்லி தலைமைச் செயலாளர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததற்கும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், டெல்லி தலைமைச் செயலாளர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

Advertisement

Related News