தெருநாய் விவகாரம்: உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரிய வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில், மாநிலம் முழுவதும் பராமரிப்பின்றி சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement