தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூறைக்காற்று, இடி மின்னலுடன் கனமழை தரையிறங்க முடியாமல் வானில் 10 விமானங்கள் வட்டமடித்தன: சென்னையில் 25 விமான சேவை பாதிப்பு

சென்னை: சூறைக்காற்று, இடி மின்னலுடன் ஒருமணி நேரம் கனமழை பெய்ததால் 10 விமானங்கள் தரையிரங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. சென்னையில் 25 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை திடீரென்று பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் சுமார் ஒருமணி நேரம் கனமழை பெய்தது. மோசமான வானிலை நிலவியதால் சென்னை விமான நிலையத்தில் விமானங்களை கையாள்வதில் சிரமம் ஏற்பட்டது.

Advertisement

இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் விமானங்களை பாதுகாப்பாக தரையிறக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சென்னையில் தரையிறங்க வந்த கொச்சி, தூத்துக்குடி, மும்பை, டெல்லி, மதுரை, விஜயவாடா, திருச்சி, டெல்லி, சீரடி, பெங்களுரு உள்ளிட்ட 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்து விட்டு, மழை சற்று ஓய்ந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின.

சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய குவைத், துபாய், டெல்லி, கொச்சி, கோவா, மங்களூரூ உள்ளிட்ட 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னை புறநகர் பகுதிகளில் திடீரென பெய்த ஒரு மணி நேர மழையால் சென்னை விமான நிலையத்தில் 25 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Advertisement