தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூறைக்காற்றுடன் பலத்த மழை சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை திடீரென பலத்த சூறைக்காற்று இடி, மின்னலுடன் மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று அதிகாலை 2.30 மணியிலிருந்து, சுமார் ஒரு மணி நேரம் பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் மழை பெய்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கத்தார் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து 317 பயணிகளுடன் அதிகாலை 2.50 மணிக்கு, சென்னைக்கு தரையிறங்க வந்த கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்து விட்டு, பெங்களூரு திரும்பிச் சென்றது.

Advertisement

அதேபோல், துபாய், சார்ஜா, லண்டன் விமானங்களும், வானில் வட்டமடித்து பறந்து விட்டு, அதன் பின்பு மழை ஓய்ந்ததும் சென்னையில் தரையிறங்கின. அதோடு சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் மொரீசியஸ், தாய்லாந்து, துபாய், சார்ஜா, லண்டன், அபுதாபி, டெல்லி, கொச்சி உள்ளிட்ட 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னை புறநகர் பகுதிகளில் திடீரென பெய்த ஒரு மணி நேர மழையால் சென்னை விமான நிலையத்தின் வருகை, புறப்பாடு விமானங்கள் மொத்தம் 14 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் தவிப்பு அடைந்தனர்.

Advertisement

Related News