தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூறைக்காற்றால் படகு இல்லம் மீது விழுந்த பெரிய மரங்கள்: படகு இல்லத்தின் மேற்கூரை, கண்ணாடி ஜன்னல் முற்றிலும் சேதம்

நீலகிரி: உதகையில் ராட்சத மரம் விழுந்ததில் தேனிலவு படகு இல்லம் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. உதகையில் கடந்த சில நாட்களாகவே மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது.  இந்த நிலையில் நேற்று இரவில் இருந்து மழையின் தாக்கம் குறைந்து சூறைக்காற்று அதிகரித்து உள்ளது. இதில் உதகையில் ராட்சத மரங்கள் விழுந்ததில் தேனிலவு படகு இல்லத்தில் மேற்கூரையில், ஜன்னல்கள் மற்றும் அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் பலத்த சேதம் அடைந்தது. குறிப்பாக படகு இல்லதை சுற்றி ஏராளமான ராட்சத மரங்கள் உள்ளதால் இந்த மழை காலங்களில் படகு இல்லத்தில் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதனால் உடனடியாக தேனிலவு படகு சுற்றியுள்ள அபாயகரமான மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாள்தோறும் இந்த தேனிலவு படகு இல்லம் சுற்றி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், இன்று மரம் விழுந்து படகுகள் சேதம் அடைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே போன்ற படகு இல்லமும் மூடப்பட்டுள்ளது, தொடர்ந்து இந்த பகுதியில் இருக்கக்கூடிய மரங்களை சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படாதவாறு மாவட்டம் நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement