தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகார் தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளரின் கார் மீது கல்வீச்சு: போதை ஆசாமியின் ரகளையால் பரபரப்பு

 

Advertisement

 

ஆரா: பீகாரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளரின் கார் மீது குடிகாரர் ஒருவர் கல்வீசித் தாக்கிய சம்பவம், அங்குள்ள மதுவிலக்கு சட்டத்தின் நிலைகுறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் சட்டமன்றத் தேர்தலையொட்டி, ஜன சுராஜ் கட்சி வேட்பாளர் டாக்டர் விஜய் குப்தா, போஜ்பூர் மாவட்டம் ஆராவில் உள்ள ஒரு கிராமத்தில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அவரது வாகனம் கிராமத்திற்குள் நுழைந்தபோது, மதுபோதையில் இருந்த நபர் ஒருவர், திடீரென பிரசார வாகனம் மீது செங்கற்களையும் கற்களையும் சரமாரியாக வீசித் தாக்குதல் நடத்தினார். இதில், அந்த வாகனத்தின் முகப்புக் கண்ணாடி நொறுங்கி, கார் பலத்த சேதமடைந்தது.

தாக்குதலின்போது, வேட்பாளர் விஜய் குப்தா மற்றொரு வாகனத்தில் இருந்ததால் காயமின்றி தப்பினார். தாக்குதலில் ஈடுபட்ட நபர், காரின் மீது ஏறி நின்று, மற்றொரு அரசியல் கட்சியின் பெயரைச் சொல்லி தரக்குறைவாகப் பேசியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கிராம மக்களும், கட்சித் தொண்டர்களும் அந்த நபரை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து டாக்டர் விஜய் குப்தா கூறுகையில், ‘இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த அந்த நபர், எங்கள் வாகனத்தைக் குறிவைத்துள்ளார். பீகாரில் மதுவிலக்கு என்பது காகிதத்தில் மட்டுமே உள்ளது என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது’ என்றார்.

Advertisement