தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

3000ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிமனிதன் கற்திட்டைகளை ஆய்வு செய்த தொல்லியல் துறையினர்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை பகுதியான பண்ணைக்காட்டில் இருந்து தாண்டிக்குடி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள எதிரொலி பாறை அருகே அமைந்துள்ள தொல்லியல் துறை கட்டுபாட்டில் அமைந்துள்ள சுமார் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த 20 கும் மேற்பட்ட கற்திட்டைகள் அமைந்துள்ளது.

Advertisement

மேலும் இந்த கற்திட்டைகள் அமைந்துள்ள பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் தற்போது புதர்கள் மண்டி சிதிலமடைந்து காணப்படுகிறது. இது குறித்து பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் இன்று தொல்லியல் துறை சார்பில் உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த பகுதிக்கு வந்து இங்குள்ள கற்திட்டைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் முதற்கட்டமாக இங்கு புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டதுடன், சிதிலமடைந்துள்ள கற்களை தற்காலிகளாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து பேசிய இந்திய தொல்லியல் துறையில் திருச்சி தொல்லியல் துணை கண்காணிப்பாளர் முத்துகுமார், திருச்சியில் இருந்து கன்னியாகுமரி வரையில் 162 நினைவு சின்னங்கள் உள்ளது என்றும் இதில் திண்டுக்கல் மலைக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருப்பதாகவும் இதில் பாதுகாக்கப்பட கூடிய நினைவு சின்னங்களாக உள்ளதில் இந்த கொடைக்கானல் மலை பகுதியில் 5 இடங்கள் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் உலக பாரம்பரிய வார விழாவில் இந்த பழமையான சின்னங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இங்கு வந்ததாக அவர் கூறினார். இதனையடுத்து அடுத்த கட்டமாக இவற்றை பாதுகாக்கும் பணியில் தீவிரப்படுத்தி சுற்றுலா இடமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கபடும் என்று தெரிவித்தார்.

மேலும் இங்குள்ள கற்திட்டைகள் சுமார் 3000ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்றும், இது தஞ்சை பெரிய கோவிலை விட 1000ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் கட்டிட கலை குறித்து முன் உதாரணமாக அந்த காலத்திலேயே இங்குள்ள கற்திட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது,என்றும் இங்கிருந்து தான் கட்டிட கலை தொடங்கப்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

மேலும் கீழடியை விட மிகவும் பழமையான ஒரு நினைவு சின்னம் இது என்றும், இது போல கட்டிட கலையை அப்போதே கொண்டுவரப்பட்டுள்ளது இது அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Related News