தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 25% போனஸ் வழங்க வேண்டும்: ஏஐடியூசி வலியுறுத்தல்

சென்னை: ஏஐடியூசி பொதுச்செயலாலர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த முறையில் பணிபுரிந்து வரும் ஓட்டுநர், நடத்துனர் பாதுகாவலர்கள், உணவகத்தில் பணிபுரிவோர், பஸ் பாடி கிளீனர், சுகாதார பணியாளர்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பணிபுரிந்து வரும் டிக்கெட் கன்வாசர் என 30 தினங்களுக்கு மேல் 2024-25ம் நிதியாண்டில் பணிபுரிந்துள்ளனர். போனஸ் சட்டப்படி இந்த தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும். ஆனால் இந்த தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். எனவே அரசின் சமூக நல நோக்கங்களை நிறைவேற்றி வரும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு லாப நட்ட கணக்கு பார்க்காமல் தற்போதுள்ள விலைவாசி உயர்வையும் கணக்கில் கொண்டு 25% போனஸ் குறைந்தபட்ச ஊதியத்தின்படி கணக்கிட்டு வழங்க வேண்டுமென ஏ.ஐ.டி.யு.சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement