தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் 23ம் தேதி கொடைக்கானலில் நடக்கிறது: ஏ.எம்.விக்கிரமராஜா அறிவிப்பு

Advertisement

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம், வரும் 23ம்தேதி திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், ஓட்டல் கோடை இன்டர்நேஷனலில் நடைபெற உள்ளது. பேரமைப்பு மாநிலத் தலைவரான நான் கூட்டத்துக்கு தலைமை வகிக்கிறேன். மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு வரவேற்புரை நிகழ்த்துகிறார். மதுராந்தகத்தில் நடைபெற்ற மே-5, 42-வது வணிகர் தின மாநில மாநாட்டின் வரவுசெலவு கணக்குகள் மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, பேராசிரியர் ஆர்.ராஜ்குமார் ஆகியோர் தாக்கல் செய்ய உள்ளனர்.

இச்செயற்குழு கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்று, பேரமைப்பின் வருங்கால நடவடிக்கைகளுக்கு தங்களின் ஆலோசனைகளை அளித்திடவும், வணிகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண உரிய வழிமுறைகளை காணுதல் போன்றவை சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Advertisement