தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநில உரிமை பாதுகாப்பு கருத்தரங்கு மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு: பெ.சண்முகம் தகவல்

Advertisement

மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6ம் தேதி வரை மதுரையில் நடக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். நிறைவாக 6ம் தேதி நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கின்றனர். 3ம் தேதி மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கும் மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது.

ஒன்றிய பாஜ அரசு இந்திய அரசியல் சாசனம் மாநில அரசுகளுக்கு வழங்கிய அதிகாரத்தை பறிக்க கூடிய வகையிலும், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி மறுப்பு, மொழி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத காரியங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் பாஜ அல்லாத மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டு மதுரையில் நடத்தும் இக்கருத்தரங்கானது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அதிமுக ஆட்சி காலத்திலும் தொடர்ந்து நடந்ததுதான். திமுக ஆட்சியில் குற்றவாளிகளை கைது செய்வது, கடும் சட்ட நடவடிக்கைகள் எடுப்பது என நடவடிக்கைள் வேகமடைந்துள்ளது.

Advertisement