தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முத்திரைத்தாளில் தேதியை திருத்தி மோசடி: அதிமுக மாஜி எம்எல்ஏ மீது வழக்கு

Advertisement

கோத்தகிரி: முத்திரை தாள்களில் தேதியை திருத்தி மோசடியில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் திலிப். இவருக்கு சொந்தமான நிலத்தில் தனியார் டீ பேக்டரி உள்ளது. அந்த நிலம் முத்திரைத்தாளில் தேதி மாற்றி அபகரிக்கப்பட்டிருப்பது திலிப்புக்கு தெரியவந்தது.

அதனை உறுதி செய்ய தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்தார். இதையடுத்து ஊட்டியில் உள்ள மாவட்ட பதிவாளர் முன்னிலையில் ஆய்வு நடந்தது.அப்போது குன்னூர் அதிமுக மாஜி எம்எல்ஏ சாந்தி ராமு, அவரது சகோதரர் ராஜன் மற்றும் ராஜ்குமார், ராஜூ, லிங்கியம்மாள், துரை என்பவரின் வாரிசுகள் தீபு, திலீப், ரஞ்சித் ஆகியோர் ஊட்டியில் உள்ள முத்திரைத்தாள் விற்பனையாளரிடம் ரூ.50 மதிப்புள்ள முத்திரைத்தாள்களை 8.2.2012 மற்றும் 22.2.2012 அன்று வாங்கி அந்த முத்திரைத்தாள்களில் உள்ள தேதியை 31.5.2006 மற்றும் 22.2.2010 என முன் தேதியிட்டு திருத்தம் செய்து போலியான ஆவணங்களை தயாரித்து இருப்பது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் திலிப் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அரசை ஏமாற்றி முத்திரைத்தாளில் தேதியை திருத்தம் செய்து போலியாக ஆவணங்கள் தயாரித்த மாஜி எம்எல்ஏ சாந்தி ராமு உள்பட 8 பேர் மீது கோத்தகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News