தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்த வழக்கு அதிமுகவுக்கு சம்மட்டி அடியை உச்சநீதிமன்றம் கொடுத்துள்ளது: எடப்பாடி இனிமேலாவது திருந்த வேண்டும், ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை அறிமுகம் செய்த உடன் புதிதாக ஏதோ கண்டுபிடித்தது போலவும், புதிதாக ஞானோதயம் வந்தது போலவும் சி.வி.சண்முகத்தை ைவத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் திட்டம் வைக்க கூடாது என எடப்பாடி வழக்கு போட செய்துள்ளார். ஆனால் உண்மையை யாரும் மறைத்து விட முடியாது.

இது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு அல்ல. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு. அவர்கள் அனைவரது பெயரிலும் உள்ள திட்டங்களை நீக்க வேண்டிய நிலை உருவாகி இருந்தது. இவர்களுக்கு எதிராக அதிமுக இவ்வளவு பெரிய துரோகத்தை செய்துள்ளது. இதை எதிர்த்து தான் திமுக சார்பில் வழக்கு தொடர்ந்து இருந்தோம்.

அவர்களை போன்று கேவலமான அரசியலை செய்யக் கூடாது என அதிமுகவுக்கு சம்மட்டி அடியை உச்சநீதிமன்றம் கொடுத்துள்ளது. லட்சக்கணக்கான மக்களை அரசு அதிகாரிகள் சந்திப்பது எந்த ஆட்சியிலும் நடைபெறவில்லை. தற்போது அது நடைபெறுகிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அதிமுக இதை செய்துள்ளது. அவர்கள் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது. ஜெயலலிதாவிற்கு அனைத்தையும் செய்தது திமுக தான். ஜெயலலிதா பெயரில் கொண்டு வரப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

அதையும் நீதிமன்றம் சென்று ஒப்புதல் பெற்றது திமுக தான். எடப்பாடி பழனிசாமி இனிமேலாவது திருத்திக் கொள்ள வேண்டும். பாஜகவிடம், அதிமுக கட்சியை அடமானம் வைத்து விட்டனர். பிரதமர் மோடியோ, காந்தி, நேரு பெயரில் திட்டங்கள் இருக்கக் கூடாது என்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என யார் பெயரையும் சொல்லக்கூடாது என வழக்கு தொடுத்துள்ளார்.